Friday, March 20, 2015

இந்த பாடலை கேளுங்கள்... மணம் அமைதியாக இருக்கும் ..... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய


இந்த பாடலை கேளுங்கள்... மணம் அமைதியாக இருக்கும் ..... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய பாடல் வரிகள் ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்ச்ங்களால் அந்த இன்னுயிர் வாழ்க பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை கடல் தொடு ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன ! மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க ! தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க ! பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க! போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க !

Thursday, March 19, 2015

மனிதாபிமானம் மிக்க சிலரால் மீட்கப்பட்ட நாய்க்குட்டி: மனதை உருக்கும் காணொளி


மனிதாபிமானம் மிக்க சிலரால் மீட்கப்பட்ட நாய்க்குட்டி: மனதை உருக்கும் காணொளி

தில்லு இருக்கறவங்க மட்டும் Play பண்ணுங்க நண்பர்களே..!!!


தில்லு இருக்கறவங்க மட்டும் Play பண்ணுங்க நண்பர்களே..!!!

Fish


புதுச்சேரியில் ‘ஆம்லா ஆபரேஷன்’ தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

image
புதுச்சேரி, மார்ச் 18: புதுச்சேரியில் ‘ஆம்லா ஆபரேஷன்’ தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவதைத் தடுப்பதற்காக 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆபரேஷன் ஆம்லா நடத்தப்பட்டு வருகிறது . இதுவரை 6 முறை நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினரின்  ஆம்லா ஆப்ரேஷன்  ஒத்திகையில் தீவிரவாதிகள் போன்று மாறு வேடத்தில், கடல் வழியாகவோ அல்லது சாலை வழியாகவோ ஊடுருவி வரும் கடலோர காவல் படை கமாண்டோக்கள், ஊருக்குள் எதாவது ஒரு பகுதிக்குள் ஊடுருவார்கள். இதனைக் கண்டுபிடித்து கடற்கரையோரப் பாதுகாப்பில் இருக்கும் காவல்துறையினர் அவர்களை  பிடிப்பார்கள். இதுவே ஆம்லா ஆப்ரேஷன் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆம்லா ஆபரேசன் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 6 மணிக்கு  தொடங்கி 36 மணிநேரம் நடைபெறுகிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு படை புதுச்சேரி போலீசார் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை செய்வார்கள்.
புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் போலீசார் கடல் வழியாக யாராவது ஊடுருவுகின்றனரா என்று பைனாகுளர் மற்றும் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Wednesday, March 18, 2015

7 நாளில் தொப்பையை குறைத்து, குறிகிய இடையை பெறலாம்

7 நாளில் தொப்பையை குறைத்து, குறிகிய இடையை பெறலாம்

ஈழத்து சிறுமியை ஏமாற்றிய விஜய் டிவி : வெளிச்சத்துக்கு வந்த பித்தலாட்டம்!

Airtel-Super-Singer-Junior-4-Grand-Finale-Vijay-TV-Winner-Announced1விஜய் டிவி நடத்திய சூப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை எந்த போட்டிக்கும் இல்லாத அளவு இந்தவருட போட்டிக்கு உலக தமிழர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர். காரணம் ஈழத்துச்சிறுமியான ஜெசிக்கா இந்த போட்டியில் கலந்துகொண்டதால், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
ஆனால், இந்த போட்டியில் முறைகேடு நடந்துள்ளது என்று செய்திகள் வெளியாகின. அதை உறுதி செய்வது போல் தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
உண்மையான வெற்றியாளரை மறைத்து, வேறுசில நோக்கத்துடன் தவறான வெற்றியாளரை திட்டமிட்டு அறிவித்துள்ளது விஜய் டிவி. அந்நிகழ்ச்சியில் பணியாற்றிய  சிலரால் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என துல்லியமான பட்டியலை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு…
Total votes            15840172
Jessica                 10353440
Anushya                2103555
Spoorthi                1311630
Srisha                   1102017
Haripriya                506221
Bharath                  463309
விஜய் டிவி இதன்மூலம் சூப்பர் சிங்கர் போட்டியை நேர்மையற்ற முறையில் நடத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது.